Tuesday, September 27, 2011

அரசு ஐ.டி.ஐ.களில் செப்டம்பர் 30-ம் தேதி வரை நேரடி சேர்க்கை

சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள காலியிடங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட செய்தி: சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன பாடத் திட்டத்துடன் கூடிய சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் கேட்டரிங், வட சென்னை வள்ளலார் நகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டுமானம் மற்றும் மரவேலைப்பாடு, அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆட்டோமொபைல், கிண்டி (மகளிர்) தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆடை வடிவமைத்தல், வேலூர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தோல் பொருள் மற்றும் காலணி தயாரித்தல், செங்கல்பட்டு தொழிற்பயிற்சி நிலையத்தில் உற்பத்தி மற்றும் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் செப்டம்பர் 30-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...