முன்னுரை:
ஏக அல்லாஹுவின் திருபெயரைக்கொண்டு ஆரம்பிக்கின்றோம் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)சிறப்புமிக்க ஓர் ஊரை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மது பந்தர் ஒர் அறிமுகம்:
ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட இஸ்ஸாமிய குடும்பங்கள் வகிக்கும் இந்த கிராமத்தில் தற்போது ஜமாத் தலைவராக Mr.முஹம்மது இக்பால் அவர்களும், துணை தலைவராக Mr.அப்துல் முத்தலீப் அவர்களும், செயலாளர்ராக சேட்டு என்கிற Mr. முஹம்மது காசிம் அவர்களும், ஊராட்சி மன்ற தலைவராக Mr.சேக் அலாவுதீன் அவர்களும் இருக்கிறார்கள்.
பள்ளிவாசல்கள்(மஸ்ஜித்),திருமண மண்டபம், மதரஸா, வங்கிகள், பள்ளிகூடங்கள்(Schools), மருத்துவ மையங்கள்,தொலைபேசி மையங்கள், அஞ்சலகம், பல்கலைகழகம்,வணிக வளாகங்கள்,விளையாட்டு மைதானங்கள் மற்றும பல வசதிகளை கொண்ட ஒர் அமைதியான கிராமம் முஹம்மது பந்தர்.
முஹம்மது பந்தர் மக்களின் தொழில்
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளது. நெல், வாழை, கரும்பு, வெற்றிலை போன்றவை இங்கு பயிரிடப்படுகின்றன.
சமூக, மதநல்லிணக்கத்தோடு, சாதி மத பேதமின்றி ஒற்றுமையோடு எம்மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். (எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்).
இவ்வலைப்பதிவை முஹம்மது பந்தர் தகவல் பறிமாறும் நோக்கத்துடன் உருவாக்கியிருக்கிறோம். பார்வையிடும் தாங்களும் எங்களுக்கு உதவும் விதமாக தாங்களறிந்த முக்கிய தகவல்களை mohamedbunder1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
முடிவுரை:
இப்பகுதியை படிக்கும் அனைவரும் முஹம்மது பந்தர் மேலும் செழிப்படைந்து பெரிய நகரமாக உருவாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
H.M.Mujeeb Rahman.
Mob : 0097155 9874556
E Mail: mujeeb.asl@gmail.com
இந்தியா தொடர்புக்கு:
E-Mail-
E-Mail- harisimam@hotmail.com