Monday, August 8, 2011

இந்திய நண்பர்கள் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்


ஆக.12, துபாயில் இந்திய நண்பர்கள் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

துபாய் : துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கன்சல் ஜெனரல், இந்திய சமூக நல மையம் மற்றும் இந்திய நண்பர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து 12.08.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ரத்ததான முகாமினை இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்த இருக்கிறது.

ரத்ததான முகாமினை இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா துவக்கி வைக்கவும், இந்திய சமூக நல மைய கன்வீனர் கே. குமார் தலைமை தாங்கி நடத்தி வைக்க இருக்கின்றனர்.

ரத்ததான முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் 050 91 97 421 / 050 77 84 167 / 050 200 32 58 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் blooddonationfoi@gmail.com மற்றும் blooddonationfoi1@gmail.com ஆகிய மின்னஞ்சலிலும் தங்களது வருகையினை முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய நண்பர்கள் அமைப்பின் ரத்ததானக் குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

ஃபூயூட்சர் விஷன் மற்றும் கோட்டூர் இண்டர்னேஷனல் ஆகிய நிறுவனங்கள் ரத்ததான முகாம் சிறப்புற நடைபெற அனுசரணை வழங்கியுள்ளன.

தகவல் – முதுவை ஹிதாயத்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...