Friday, August 19, 2011

தொழுகையின்போது பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 53 பேர் பலி


பெஷாவர் : பாகிஸ்தான் மசூதி ஒன்றில் தற்கொலைப்படை தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 53 பேர் உடல் சிதறி பலியானார்கள். 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஆகும். பாகிஸ்தானின் பக்துன்கவா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள ஜம்ருத் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் ரம்ஜான் மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தொழுகை நடைபெற்றது.

சுமார் 300 பேர் குழுமியிருந்தனர். தொழுகை முடிந்து வெளியே வந்தபோது திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தகவல் அறிந்த போலீசாரும் மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில் 53 பேர் உடல் சிதறி பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 123 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் அருகில் உள்ள ஜம்ருத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...