Friday, August 19, 2011

எளிமையாக அதிக நன்மை


அதிக நன்மைகளை ஒரே நேரத்தில் பெற, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் இந்த எளிய வழிமுறைகளைக் கேளுங்கள்.

* எவரேனும் ஒருவர் ""லாயிலாஹ இல்லல்லாஹு வஸ்தஹு லாஷரீக்க லஹு அஹதன் ஸமதன் லம் யலித் வலத் யூலத் வலம் யகுன்லஹு குபுவன் அஹதுன் என்று ஓதுவாராகில் அவருக்காக இருபது லட்சம் நன்மைகள் எழுதப்படுகின்றன.

* "ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் என்னும் இந்த தஸ்பீஹை மண்ணகத்தில் கூறாத பொருள் எதுவுமே இல்லை. யார் இந்த தஸ்பீஹைக் கூறுகிறார்களோ அவர்களின் பாவங்கள் கடலை விட அதிகமாக இருந்தாலும் மன்னிக்கப்படுகின்றன.


* "சுபுஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்.... இதனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு மரம் வீதம் சொர்க்கத்தில் நடப்படுகிறது.

* "ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் என்னும் இந்த தஸ்பீஹை எவரொருவர் நூறு தடவை சொல்கிறாரோ அது அவருக்கு பத்து அடிமைகளை உரிமை விடுவதை விடவும், ஏழு ஒட்டகங்களை அறுத்து குர்பானி கொடுப்பதை விடவும் சிறந்தது ஆகும்.

* நீங்கள் ஓடியாடி உழைக்கும்போது, அடிக்கடி, "ஸுபுஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு என்ற இந்த நான்கு சொற்களில் எதையாவது ஒன்றை சொல்லுங்கள். நான்கையும் சொன்னாலும் நன்மையே. உங்கள் உழைப்புக்கேற்ப தீங்குகள் நீக்கப்பட்டு பரகத் உண்டாகும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...