Saturday, August 27, 2011

விரைவில் 10 ரூபாய் ப்ளாஸ்டிக் நோட்டு!


Plastic Currency Notes
டெல்லி: இந்தியாவில் விரைவில் ப்ளாஸ்டிக் நோட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நமோ நாராயணன் மீனா தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியாகின்றன.

ஆனால் இவை அதிக நாள் புழக்கத்தில் இருப்பதில்லை. சீக்கிரம் அழியும் தன்மை கொண்டதாக உள்ளன.

இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு. இந்த பாலிமர் (ப்ளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகள் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இதை தொடர்ந்து நியூசிலாந்து, நியூசிரியா, ருமேனியா, பர்முடா, புருனே, வியட்நாம் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகமாகிறது.

முதல் கட்டமாக சோதனை ரீதியில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்கப்பட உள்ளது. மொத்தம் 100 கோடி மதிப்புக்கு 10 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் என்றும் சோதனை ரீதியாக நாட்டின் 5 நகரங்களில் முதலில் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயணன் மீனா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவது தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடுவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இத்தகைய நோட்டுகளை பெருமளவில் அனைத்து மதிப்புகளிலும் அச்சடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...