புதுடெல்லி:இந்தியாவுக்கான ஹஜ் பங்கு ஒதுக்கீட்டை சவூதி அரேபியா அதிகரித்துள்ளது. 10 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்துடன் ஹஜ்ஜுக்கான இந்தியாவுக்குரிய ஒதுக்கீடு 1,70,491 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,60,491 இடங்களே ஒதுக்கப்பட்டிருந்தன.
புதிதாக கிடைத்துள்ள ஒதுக்கீட்டு இடங்களை மத்திய ஹஜ் கமிட்டி மாநில ஹஜ் கமிட்டிகளுக்கு பங்கீடுச்செய்யும். இதுவரை கிடைத்துள்ள மனுதாரர்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கான ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும்.
40 ஆயிரம் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சவூதி அரேபியா நாட்டு ஹஜ் துறை அமைச்சர் புஆத் ஃபர்ஸியுடன் ஜித்தாவில் வைத்து நடத்திய சந்திப்பில் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
No comments:
Post a Comment