Thursday, August 25, 2011

கவிதைகள்


லட்சத்தில் நகை விற்று;

ரொக்கத்தைச் சொச்சமாக்கி;
மிச்சத்தைத் தவணையாக்கி;
பொன்னானப் பெண்களிடம்
புன்னகையைப் பரிசாக்கி
வழியனுப்புவான்;
சாதி மதப் பேதமின்றி;
சாத்தானியச் சாட்டையால்
சாமரம் வீசி;
அழகானப் பெண்களை அழவைப்பான்;
திடீரென்று மிச்சத்தைக் கேட்டு
மிரளவைப்பான்;
குடும்பத்தைக் கரைச் சேர்க்க;
கரைத் தாண்டியக்
கணவன்மார்களின்
மனைவிமார்களைப்
படித்தாண்டவைப்பான்;
மிச்சத்தைக் கேட்டு;
எச்சமாக்கத் துடிப்பான்!
நகையை வியாபாரமாக்கி;
நங்கையை விபச்சாரியாக்கி;
பொறுக்கி எடுத்த நகைக்கடையின்
பொருக்கி இவன்;
சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...