Thursday, May 2, 2013

மோடிக்கு விசா வழங்கக் கூடாது: அமெரிக்க பார்லிமென்ட் குழு கோரிக்கை


நியூயார்க்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதற்கான தடையை நீடிக்க வேண்டும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் பார்லிமென்ட் குழு கோரிக்கை விடுத்திருக்கிறது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு இனக்கலவரம் வெடித்தன. இதை முதல்வராக இருந்த மோடி தடுக்க தவறிவிட்டார் என்பது நீண்டகாலமாக கூறப்பட்டு வரும் புகார். இதனால் அவருக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்தது.

இந்த நிலையில் அமெரிக்க பார்லிமென்ட் நியமித்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷனின் தலைவர் காத்ரினா லாண்டோஸ் ஸ்வெட் வாஷிங்டனில் நேற்று செய்த்யாளர்களிடம் பேசுகையில், குஜராத் வன்முறைக்கும், அங்கு நடந்த பயங்கர சம்பவங்களுக்கும், முதல்வர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. அந்த காரணங்களுக்காக நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது பொருத்தமாக இருக்காது என்றார்.

மேலும் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் ஒரு கடிதம் எழுதியதாகவும், அதில் மோடி விசாவுக்கு விண்ணப்பிக்க கூடும் என்ற அச்சத்தில், அவருக்கு விசா வழங்குவதில்லை என்ற அமெரிக்காவின் கொள்கையை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அந்த கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...