மே 13: திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.ரெத்தினசாமி 13 ஆயிரத்து 248 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் பூதலூர் ஒன்றியச் செயலர் கூத்தூர் எம். ரத்தினசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை கொண்டாடும் வகையில் அதிமுக பிரமுகர்கள் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். வெற்றி குறித்து ரத்தினசாமி கூறியது:
அதிமுக தொண்டர்கள், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி பகுதியின் பொறுப்பாளர்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் திருவையாறு தொகுதியின் அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக சாலை, மின்சாரம், குடிநீர், மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள் நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்
No comments:
Post a Comment