Wednesday, May 8, 2013

பள்ளிகளில் இனி பெண்கள் விளையாடலாம்: சவுதி அரசு அனுமதி


ரியாத்: சவூதி அரேபியா அரசு முதன்முதலாக விளையாட்டை அங்கீகரித்துள்ளது.பெண்கள் விளையாட்டுக்குரிய தேவையான உபகரணங்களும், ஆடைகளும் இருக்கும் பட்சத்தில், பெண்கள், உடற்கல்வி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம்,

இதுகுறித்த அறிக்கையை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் வெளியிட்டது. கடந்த சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளில் கூறியுள்ளதாவது: பெண்கள் பள்ளிகளில், பெண்கள் மேற்பார்வையாளர்களால் கண்காணிக்கப்பட்டு, விளையாட்டுக்குரிய தேவையான உபகரணங்களும், ஆடைகளும் இருக்கும் பட்சத்தில், பெண்கள், உடற்கல்வி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம். ஷரியா மதக் கோட்பாடுகள், பெண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஆதரிக்கின்றது என கல்வி அமைச்சகத்தின் தகவல் அதிகாரி முகமது அல் தகினி தெரிவித்துள்ளார்.

ஆனால், இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல் அல்ல என்று சவுதியில் ஒரு சிலர் கருதுகின்றனர். தனியார் பள்ளிகளில் ஏற்கனவே விளையாட்டுப் பிரிவு தனியே இயங்கிக்கொண்டிருக்கும் போது, இத்தகைய முயற்சி பொதுப் பள்ளிகளில் வேண்டுமானால் புதிய நடைமுறையைக் கொண்டுவர ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சவுதி அரசு, பெண்கள் விளையாட்டிற்கு வெளிப்படையாக அனுமதி அளிப்பது இதுவே முதன் முறையாகும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...