Monday, September 19, 2011

அஸ்ஸலாமு அழைக்கும் ,

தஞ்சை முக்கிய பகுதியான ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு எதிரில் திறக்க இருக்கும் புதிய மதுக்கடை அகற்றும் பணியில் மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம் களம் இறங்கியது. மாவட்ட ஆட்சியர் முதல் மாநில முதல்வர் வரை மனு அனுப்பி திறக்கமுடியாமல் திணறும் டாஸ்மாக் நிர்வாகம் இப்போது தஞ்சை நகரில் உள்ள ஆளுங்கட்சி முக்கிய பிரமுகரை ஏவி விட்டு மிரட்டும் தோனியில் களம் இறங்கி இருக்கிறது...எதுவாக இருந்தாலும் இந்த விசயத்தில் சமாதனம் இல்லை என தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறது ம ம மு க ..அதன் ஒரு பகுதியாக இன்று ஆலோசனை கேட்க தஞ்சை மாவட்ட டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ம ம மு க தஞ்சை நகர நிர்வாகியை காலை பத்து மணிக்கு வர சொன்னார் என்று சக நிர்வாகிகளுடன் டாஸ்மாக் மேலாளரை சந்திக்க சென்றபோது இந்த விசயத்தில் அரசியல் குறிக்கீடு உள்ளது என்று ம ம மு க வினரை மிரட்டி பார்க்கும் தோரணையில் பேசி இருக்கிறார் ...
சுதாரித்துக்கொண்ட தஞ்சை நிர்வாகிகள் உடனே மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியதில் நாங்கள் யாருடனும் பேச தயாராக இல்லை என்பதை அவர்களிடம் சொல்லி விட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி கேட்ட பொழுது அதே டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உடனே மாவட்ட ஆட்சியாளரை தொடர்புக்கொண்டு இன்று மாலையே சந்திக்க நேரமும் ஒதுக்கி தரப்பட்டது..

இன்ஷா அல்லாஹ் இது விசயமாக மாவட்ட ஆட்சியாளரை நேரில் சந்திக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது..

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...