அல்லாஹ் கூறியதாக நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒவ்வொரு நன்மையான காரியத்திறகும் பத்து மதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகின்றது. நோனபு எனக்குரியது அதற்கு நானே கூலிக் கொடுப்பேன். நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடேயாகும். நோன்பாலி வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்டம் கஸ்;தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்.' (அறிவிப்பாவர்: அபூஹுரைரா -ஆதாரம் திர்மிதி)
மேலும் நபிகளார் (ஸல்) கூறினார்கள் நோன்பாலிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது. மற்றது தன் நாயனை (மறுமையில்) சந்திக்கும் போது (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி)- ஆதாரம் திர்மிதி)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!"
என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். vol-2...book-30.....no-1896....sahih buhary
No comments:
Post a Comment