Wednesday, July 20, 2011

நோன்பு

நோன்பு நோற்பது ஒரு வணக்கமாகும். அதாவது அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிப்பனிவதாகும். ஒரு முஃமின் நோனபு நோக்கும் போது உண்பது, குடிப்பது, உடல் உறவு, தீய வார்த்தைகளை பேசுவது போன்ற வற்றிலிருந்து அல்லாஹ்வுக்காக தன்னை தடுத்து கொள்கிறான். இத்தகைய தன்னலமற்ற தியாகத்தின் மூலமாக ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வின் திருப்பதியையும். சுவர்க்கத்தையும் பெறுகிறான்.

அல்லாஹ் கூறியதாக நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ஒவ்வொரு நன்மையான காரியத்திறகும் பத்து மதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகின்றது. நோனபு எனக்குரியது அதற்கு நானே கூலிக் கொடுப்பேன். நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடேயாகும். நோன்பாலி வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்டம் கஸ்;தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்.' (அறிவிப்பாவர்: அபூஹுரைரா -ஆதாரம் திர்மிதி)

மேலும் நபிகளார் (ஸல்) கூறினார்கள் நோன்பாலிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது. மற்றது தன் நாயனை (மறுமையில்) சந்திக்கும் போது (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி)- ஆதாரம் திர்மிதி)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!"
என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். vol-2...book-30.....no-1896...​.sahih buhary

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...