Sunday, July 17, 2011

ஹஜ் பயணம் மேற்கொள்ள 3 ஆயிரம் பேர் தேர்வு!

வாணியம்பாடியில் மாநில ஹஜ் குழு சார்பில் ஹஜ் பயணிகளுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமதுஜான் பேசுகையில், “தமிழகத்தில் இந்த ஆண்டு ஹஜ்பயணம் மேற்கொள்ள 10,458 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3049 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஹஜ் பயணத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து 980 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். மேலும் கூடுதலாக இடங்களை தமிழகத்துக்கு ஒதுக்கி தர வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்” என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...