Wednesday, June 22, 2011

டில்லி, வட இந்தியாவில் நில நடுக்கம்

புது தில்லி : புது தில்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது.

உத்தரகண்டில் உள்ள சமோலியில் தான் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிலநடுக்கம் சில விநாடிகளே நீடித்ததால் உயிருக்கோ அல்லது உடமைகளுக்கோ எவ்வித பாதிப்புமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...