ஏ.ஆர். ரஹ்மான்யின் முதல் பாடல்
ஏ.ஆர். ரஹ்மான் இரு செய்திகள்
ஆஸ்கர் விருதுக்குப் பிறகு நின்றால் செய்தி, அசைந்தால் ஸ்கூப் என ஆல்டைம் ப்ரேக்கிங் நியூஸாகிவிட்டார் இசைப்புயல். கோடம்பாக்கத்தை இவரைப் பற்றிய இரண்டு செய்திகள் கலங்கடித்துக் கொண்டிருக்கின்றன.
ஆஸ்கர் விருதுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏ.ஆர். ரஹ்மானை அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார்கள் வங்கி ஒன்றின் உயர் அதிகாரிகள். அப்போது, எங்களுக்கெல்லாம் லோன் தரமாட்டீர்களா என விளையாட்டாகக் கேட்டிருக்கிறார் இசைப்புயல். விடுவார்களா அதிகாரிகள்? தங்களது மரியாதையை செயல்வடிவில் காட்ட கிடைத்த அரிய சந்தர்ப்பமல்லவா?
ஆஸ்கர் விருதுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏ.ஆர். ரஹ்மானை அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார்கள் வங்கி ஒன்றின் உயர் அதிகாரிகள். அப்போது, எங்களுக்கெல்லாம் லோன் தரமாட்டீர்களா என விளையாட்டாகக் கேட்டிருக்கிறார் இசைப்புயல். விடுவார்களா அதிகாரிகள்? தங்களது மரியாதையை செயல்வடிவில் காட்ட கிடைத்த அரிய சந்தர்ப்பமல்லவா?
அரை மணி நேரத்திலேயே மூன்று கோடி ரூபாய்க்கு லோன் சாங்ஷன் செய்து அசத்தியிருக்கிறார்கள் அதிகாரிகள். அட, சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் என்று ரஹ்மான் சொன்னதை யாரும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையாம்.
இரண்டாவது செய்தி காக்கிகள் பற்றியது. காவலர் நமது சேவகர் பெயரில் அபிராமி ராமநாதன் முன்பு படமொன்றை தயாரித்தாரல்லவா. காவலரின் பெருமை கூறும் அதேபோலொரு படம் மீண்டும் தயாராக உள்ளது. படத்துக்கு ரஹ்மான் இசையமைத்தால் படம் ஜனங்களிடம் ரீச் ஆகும் என்பது காவல்துறை உயரதிகாரிகளின் எண்ணம்.
ரஹ்மானை நேரில் சந்தித்து தங்களுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்கள். படத்தை எடுங்கள், இசையமைத்துத் தருகிறேன் என ரஹ்மான் க்ரீன் சிக்னல் தர, சந்தோஷத்தில் கிர்ரடித்து திரும்பியதாம் காக்கிகள். வரவேற்க வேண்டிய விஷயம்தான் இல்லையா!
No comments:
Post a Comment