Sunday, April 10, 2011

நாம் அனைவர்களின் கவனத்திர்க்கு [ மார்க்க கல்வி ]

ஆயிரமாயிரம் அள்ளிக்கொடுத்து பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களே !

 அந்த பிள்ளைகளை மாதரஸாவில் சேர்க்க மட்டும் மறப்பது ஏனோ !

வாத்தியார் வீடு தேடி சென்று...பிள்ளைகளுக்கு- டியூசன் வைத்து மாதம் தவறாது பீஸ் தரும் நீங்கள் ஹஜ்ரத் வீடு தேடி வந்து.. பிள்ளைகளை ஓதிட அழைக்கையில்... எங்கள் பிள்ளைகளுக்கு அதர்க்கெல்லாம் நேரமில்லையென்று நடிப்பது ஏனோ !

 பள்ளி முதல் பல்கலை கழகம் வரை படித்து வந்து பெரிய பதவியில் இருந்தும் சிலர்..மார்க்க கல்வி மட்டும்- கற்காது போனதால் தீய வழிகளில் தேய் பிறையாகி ...அழிகின்றனர் இங்கே !

 மார்க்கக் கல்வி பண்பை தரும்! அறிவை தரும்! ஒளிமயமான வாழ்வை தரும்!

 உலக கல்வி கற்றல் தொழில், வேலை செய்து பணம் சாம்பாரிக்கலாம். இதுவும் அவசியமே! நான் மறுக்கவில்லை!

மார்க்க கல்வி கற்றலோ இறைவனை- தொழுது தினம் நன்மையை சம்பாதிக்கலாம்! ஆதலால் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் ஓதிட மதராசாவிற்க்கு அணுப்புங்கள் !

ஓதி வரும் அந்த பிள்ளைகளை வாங்கையோடு கொஞ்சி நெஞ்சம் மகிளுங்கள்.

தொகுப்பு யாவாரி ஜாஹீர் ஹூசேன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...