Wednesday, April 6, 2011

முகமதுபந்தர் பற்றி:-




தஞ்சாவூரிலிருந்து அரியலுர் செல்லும் சாலையில் சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் திருவையாறுக்கு அருகில் உள்ளது முகமதுபந்தர் கிராமம்.தஞ்சாவூறை  மாவட்டமாகவும் திருவையாறை தாலுக்காவும் கொண்ட ஒர் இஸ்ஸாமிய கிராமம் முகமதுபந்தர்.ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட இஸ்ஸாமிய குடும்பங்கள் வகிக்கும் இந்த கிராமத்தில் தற்போது ஜமாத் தலைவராக Mr.முஹம்மது இக்பால் அவர்களும் ஊராட்சி மன்ற தலைவராக Mr.சேக் அலாவுதீன் அவர்களும் இருக்கிறார்கள்.

விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளது. நெல், வாழை, கரும்பு, வெற்றிலை போன்றவை இங்கு பயிரிடப்படுகின்றன.

பள்ளிவாசல்கள்(மஸ்ஜித்),திருமண மண்டபம்,
மதரஸா,வங்கிகள்,பள்ளிகூடங்கள்(Schools), மருத்துவ
மையங்கள்,தொலைபேசி மையங்கள்,அஞ்சலகம்,வணிக வளாகங்கள்,விளையாட்டு மைதானங்கள் மற்றும பல வசதிகளை
கொண்ட ஒர் அமைதியான கிராமம் முகமதுபந்தர்.

சமூக, மதநல்லிணக்கத்தோடு, சாதி மத பேதமின்றி ஒற்றுமையோடு எம்மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். (எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்).

இவ்வலைப்பதிவை முகம்மது பந்தர் தகவல் பறிமாறும் நோக்கத்துடன் உருவாக்கியிருக்கிறோம். பார்வையிடும் தாங்களும் எங்களுக்கு உதவும் விதமாக தாங்களறிந்த முக்கிய தகவல்களை  mohamedbunder1@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 



This Blogspot Admin:-
H.Mujeeb Farook.
Dubai
E mail : mujeeb_bca@yahoo.co.in
Mob : 0097155-9874556

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...