பக்கங்கள்

Sunday, November 20, 2011

மருத்துவ மனையில் இருக்கும் குழந்தை நலமடைய துவா செய்யவும்

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
அஸ்ஸலாமு அழைக்கும்.

மருத்துவ மனையில் இருக்கும் குழந்தை நலமடைய துவா செய்யவும்
என்னுடைய தம்பிக்கு பெண் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. பிறக்கும் போதே இருதய வாழ்வில் பிரச்னை இருந்தது. மருத்துவர்கள் இபொழுது அறுவை சிகிச்சை தேவை இல்லை ஒரு வயதுக்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
இப்பொழுது சளி அதிகமாக சேர்ந்து குழந்தை மூச்சு விட கஷ்டபடுகிறது. குழந்தையை ஒரு வாரமாக மதுரை வடமலையான் ஹோச்பிடலில் ICU வில் வைத்து பார்த்து வருகிறோம். மருத்துவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேற்றம் அடைவதாக சொல்கிறார்கள்.
குழந்தை விரைவில் குணமடைய சகோதரர்கள் அனைவரும் எல்லாம்வல்ல அல்லாவிடம் துவா செய்யுமாறு வேண்டி கொள்கிறேன்.
அன்புடன்,
சுல்தான் - அருப்புகோட்டையில் இருந்து

தொழுகை மற்றும் பொறுமையைக் கொண்டு உங்கள் குடும்பத்தார் அனைவரையும் இறைவனிடம் மட்டும் உதவி தேட சொல்லுங்கள். இன்ஷா அல்லாஹ், இறைவனின் மாபெரும் உதவி கட்டாயம் கிட்டும்.

"இறைவா இக்குழந்தைக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியமான உடல்நலத்தையும் வழங்குவாயாக. மிக விரைவாக குணமடைந்து பெற்றோரின் சந்தோசத்தினை அதிகரிப்பாயாக. ஆமீன்.

அன்புடன்,
ஜியாவுதீன். ஹ
திருப்பட்டினம்.
௧௯ நவம்பர், ௨௦௧௧ ௧௦:௪௫ முற்பகல் அன்று, Sultan Syed எழுதியது:


No comments:

Post a Comment