பக்கங்கள்

Wednesday, January 16, 2013

சகோதரா,சகோதரிகள் அனைய்வருக்கும் எனது ஸலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் வ பரக்காத்துஹு!

நபிகள் நாயகத்தின் சிறப்பு

பொருள் நிறைந்த பொன் மொழிகள் வழங்கப்பட்டிருக்கிறேன்.

என்னை கண்டால் எதிரிகள் பயப்படுவார்கள்.

யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டன.

நிலமெல்லாம் தொழுகை இடமாகவும், தூய்மை படுத்தும் பொருளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.

மனித குலம் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.

நபிமார்களின் வருகை என்னால் நிறைவு படுத்தப்படுகிறது.

அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (812)

மறுமை (கியாம) நாளில் மற்ற நபிமார்களை பின்பற்றுபவர்களை விட என்னைப் பின்பற்றுபவர்களே அதிகமாக இருப்பார்கள்.

அனஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (290)

என்னுடைய சமுதாயத்தில் 30 பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அனைவரும் தன்னை நபி என்று வாதிப்பார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ர­லி)
நூல் : திர்மிதீ (2145)

நிறைவான கருத்துக்களை குறைவான வார்த்தைகளில் வெளியிடும் ஆற்றலை நான் வழங்கப் பெற்றுள்ளேன்.

அபூஹுரைரா (ரலி) நூல் :புகாரி