ஒரு நல்லடியாரை சந்தித்தால் அவருக்கு "ஸலாம்" சொல்லுங்கள்.
அவர் விருந்துக்கு அழைத்தால், அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அவர் அறிவுரை வழங்கக்கோரினால், அவருக்கு அறிவுரை வழங்குங்கள்.
அவர் உடல் நலம் குன்றி இருந்தால், அவரை சென்று பாருங்கள்.
அவர் மரணித்து விட்டால், அவருக்காக நடக்கும் "ஜனாஸா" தொழுகையில் கலந்து கொள்ளுங்கள்.
என ஒரு நல்லடியார் மற்றொரு நல்லடியாருக்கு செய்ய வேண்டிய கடமைகளாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.