Thursday, October 13, 2011

காணவில்லை

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன?

அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.

இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.

இதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்? மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

Monday, October 3, 2011

குவைத் எண்ணை நிறுவனத்தில் (KNPC) வாயு கசிந்து 4 தமிழர்கள் பலி, 5 பேர் காயம்

மினா அல் அஹ்மதி : குவைத்தில் உள்ள மிகப் பெரிய எண்ணை உற்பத்தி நிலையமான KNPC-ல் சனிக்கிழமையன்று பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது வாயு கசிந்ததால் 4 தமிழர்கள் பலியானதோடு மூன்று தீயணைப்பு படையினர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

அன்றாட பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்குள்ள குழியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தீடீரென்று அஜாக்கிரதையால் மூடப்பட்டிருக்க வேண்டிய வால்வை திறந்ததால் இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தீடீரென்று வாயு கசிந்ததால் அதை சுவாசித்த 4 நபர்கள் இறந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.. இறந்த ராஜாராம், லோகநாதன், ஜானகிராமன், சண்முகம் ஆகிய 4 நபர்களும் தமிழர்கள் என்பதும் குவைத்தின் மிகப் பெரும் கட்டுமான நிறுவனமான கராபி நேஷனலில் பணி புரிகிறவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் மொத்தம் 3 எண்ணை உற்பத்தி நிறுவனங்கள் மினா அல் அஹ்மதி, மினா அப்துல்லா மற்றும் சுஹைபாவில் உள்ளது. இதில் தற்போது தொழிலாளர்கள் இறந்துள்ள மினா அல் அஹ்மதியில் தான் அதிகபட்சமாக 4,60,000 பேரல்கள் தினந்தோறும் எண்ணை உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 2 உற்பத்தி நிலையங்களும் சேர்ந்து 4.50.000 பேரல்கள் தினந்தோறும் உற்பத்தி செய்கின்றன. இதற்கிடையில் இந்நிகழ்வுக்கு பொறுப்பேற்று எண்ணை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Sunday, October 2, 2011

திருமண நிகழ்ச்சிகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
மணமக்கள்:-
R.சலாஹு தீன்
A.சிராஜுன் முனீரா


அவர்களின் திருமண நிகழ்ச்சி இன்ஷா அல்லா (09-10-2011)முஹம்மது பந்தர் நடைப்பெற உள்ளதால் தாங்கள் அனைவரும் வருகைப்புரிந்து மணமக்களை வாழ்த்தி எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்வோம்.
இப்படிக்கு
www.முஹம்மதுபந்தர்.tk,ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும்பொதுமக்களும்
நண்பர்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...