Wednesday, June 29, 2011

ஆன்லைனில் இந்திய ரயில் நேரங்கள், டிக்கட் முன்பதிவு, டிக்கட் விலைகள் காண சிறந்த 5 தளங்கள்


வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் எங்கு சென்றாலும் கூட்டம் எங்கு பார்த்தாலும் கூட்டம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வதற்குள் நம்மை கசக்கி பிழிந்து விடுவார்கள். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் பயணம் செய்ய மற்ற வாகனங்களை விட ரயிலில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர்.  கட்டணமும் குறைவு, குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லலாம் மற்றும் இரவு முழுவதும் எந்த வித பிரச்சினையுமின்றி தூங்கி கொண்டே செல்லலாம் என்ற பல காரணங்களால் மக்கள் அனைவரும் ரெயிலில் செல்வதை விரும்புகின்றனர். 
ரயில்வே டிக்கட்டுகளை 90 நாட்களுக்கு முன்பே பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளதால் டிக்கட்டுகள் மளமளவென காலியாகி விடுகிறது. லைனில் காத்து கிடக்க தேவையில்லை வீட்டில் படுத்துக்கொண்டே டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். இது போன்ற வசதிகளாலே பெரும்பாலானவர்கள் இந்த ஆன்லைன் முறையை விரும்புகின்றனர். இப்படி ஆன்லைனில் ரயில் விவரங்களை கண்டறிய சிறந்த 5 தளங்களை கீழே கொடுத்துள்ளேன்.

IRCTC 


ஆன்லைனில் ரயில் விவரங்களை கண்டறியவும் டிக்கட்டுகளை முபதிவு செய்யவும் உதவும் மிக சிறந்த தளமாகும். இந்த தலத்தில் நீங்கள் உறுப்பினராக வேண்டியது அவசியம். உறுப்பினரானால் தான் ரயில் விவரங்களை உங்களால் கண்டறிய முடியும். இணையத்தில் இந்த ஒரு தலத்தில் மட்டும் தான் டிக்கட்டுக்களை முன்பதிவு செய்ய முடியும். காலை 8 TO 10 தட்கல் டிக்கட் வழங்கும் நேரம் என்பதால் அந்த சமயத்தில் இந்த தலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்வது மிக சிரமம். மற்ற சமயங்களில் நன்றாக இயங்கும். 

Tuesday, June 28, 2011

இன்று ஒரு அரிய தகவல் : குழந்தைகள் பிறந்தவுடன் அழுவ

உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த அரிய குட்டித் தகவல்கள் பதிவின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக நாம் மணிக்கணக்கில் வாசிக்கும் அல்லது கேட்கும் தகவல்களை விட ஓரிரு வரிகளிலோ அல்லது ஒரு சில நிமிடங்களிலோ, எங்கேனும் யதார்த்தமாக வாசிக்கவோ அல்லது கேட்கவோ நேரிடும் குட்டித் தகவல்கள் மிகவும் ரசிக்கும் வகையிலும், வியப்பூட்டும் வகையிலும் அமைவது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதுபோலத்தான் இன்றையத் தகவலும் உங்களை ரசிக்க வைக்கும் என்பது திண்ணம். இந்த தகவலை வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு

மூன்றே மாதங்களில் மீண்டும் உயிர்தெழுந்த ஜப்பான்



கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானை புரட்டிப் போட்டது சுனாமி. நூறாண்டுகளில் இல்லாத பாதிப்பாக இது அமைந்தது. காணாமல் போனவர்களையும் கணக்கில் சேர்த்தால் 23 ஆயிரம் பேர் பலி. 1.25 லட்சம் கட்டிடங்கள் நாசம். ரூ.13.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு. அதிகபட்சமாக 128 அடி உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து ஊருக்குள் 10 கி.மீ. தூரம் வரை பாய்ந்தது.
இதனால் ஏற்பட்ட குப்பை 2.5 கோடி டன் பசிபிக் பெருங்கடலில் 10 ஆண்டுகளுக்கு சுற்றிக் கொண்டிருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.ஆனால் நடந்த சோகத்தை உடனே மறந்துவிட்டு விறுவிறுவென மீட்பு பணிகளில் கவனம் செலுத்தினர் ஜப்பானியர்கள். சுனாமி தாக்குதல் நடந்து 3 மாதத்துக்குள் சுனாமி சுவடு தெரியாமல் நகரங்களை சீரமைத்துவிட்டார்கள். எதையும் சமாளிப்போம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் ஜப்பானியர்கள்.

நவீன வசதிகளுடன் அதிவேக பாஸ்போர்ட் மையங்கள்!


தஞ்சை மற்றும் திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய விரைவு பாஸ்போர்ட் அலுவலகங்கள் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. இவை பொதுமக்களுக்கு விரைந்து பாஸ்போர்ட் கிடைக்க வகை செய்யும்.

பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைப் போக்கும் வகையில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட உள்ளன.

இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் ஏற்கனவே இங்கு நடைமுறையில் உள்ள 8 மாவட்டத்திற்கும் திருச்சியில் விண்ணப்பிக்க எந்தத் தடையும் இல்லை.

ஜப்பான் பூகம்ப சேதம் ரூ.10.50 லட்சம் கோடி

டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட கொடிய பூகம்பம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பொருட்சேதத்தின் மதிப்பு ரூ 10 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் மிகப்பெரிய பூகம்பமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் விவசாய, மீன்பிடி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், அணு உலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டதால் கதிர் வீச்சு வெளியானது. அந்த அணு உலையே உதவாமல் போய்விட்டது. சாலை, மேம்பாலங்கள், வீடுகள் போன்றவை முற்றிலுமாக அழிந்தன.

இந்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட பூகம்ப சேதத்தின் மொத்த மதிப்பை அந்த நாட்டு அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, ஜப்பான் பூகம்பத்தின் மொத்த சேத மதிப்பு ரூ.10 லட்சத்து 49 ஆயிரம் கோடி. அதாவது அந்த நாட்டுப் பணம் யென் கணக்கில் 16.9 ட்ரில்லியன் அல்லது 210 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் அணு உலை சேத மதிப்பு சேர்க்கப்படவில்லை.

Saturday, June 25, 2011

டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் எல்பிஜிவிலை உயர்த்தப்பட்டது. இதனால் முன்பு தில்லியில் இருந்த டீசல் விலைரூ 37.75 இருந்து ரூ 40.75/லிட்டர் அக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய்ரூ 2 அதிக விலை அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் வில்லை தில்லியில் லிட்டருக்கு ரூ 14.32, கொல்கத்தா ரூ 14.72, மும்பை மற்றும்சென்னையில் ரூ 13.41 ல் ரூ 14.27.

எல்பிஜி சிலிண்டர்கள் விலை ரூ 50 ரூபாய் அதிகரித்தது இருந்தன. எனவேசமையல் எரிவாயு இப்போது எல்பிஜி சிலிண்டர்கள் சென்னை, தில்லி,கொல்கத்தா, மும்பை ஆகிய மாநகரங்களில் முறையே ரூ 402.40 ரூ398.45 ரூ 415.10 ரூ 395.35 என்ற விலைகளில் விற்கப்படுகிறது.

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையை அரசு உயர்த்தினாலும் மத்தியஅரசு , கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் டீசல்மீதான சுங்க மீதான சுங்க வரியை குறைத்து உள்ளது. எரிபொருள் விலைஉயர்வை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள திரிணமுல் காங்கிரஸ் தலைவர்மம்தா பானர்ஜி, அரசு எரிபொருள் விலை உயர்வைத் திரும்பப் பெறுவதுபற்றி யோசிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லறங்கள் தீயவைகளை அழித்து விடும்....

1758. ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றி விடும்” (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

புஹாரி :526 இப்னு மஸ்ஊது (ரலி).

1759. நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருமனிதர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றை செய்து விட்டேன். எனவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்தபோது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். எனவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (தொழுதேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் அல்லாஹ் ‘உம்முடைய பாவத்தை’ அல்லது உமக்குரிய தண்டனையை’ மன்னித்து விட்டான்” என்றார்கள்.

புஹாரி :6823 அனஸ் (ரலி).

Wednesday, June 22, 2011

திருமண அழைப்பிதழ்

இன்ஷா அல்லா
இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 29-06-2011
A.முஹம்மது ஹக்கீம் வெட்ஸ் S.ஹபாப் கனி
இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு
www.முஹம்மது பந்தர்.tk , ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும் பொது மக்களும்

இஸ்லாம்

பெண்கள் புருவமுடியை நீக்கலாமா?????????? பதில் புருவ முடிகளை அகற்றி இறைவன் படைத்த படைப்பில் மாற்றம் செய்வதை மார்க்கம் தடைசெய்துள்ளது. இக்காரியத்தை அழகிற்காக செய்தாலும் தவறு தான். பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக்கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அüத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின்சாபம் உண்டாகட்டும்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி (5931)

டில்லி, வட இந்தியாவில் நில நடுக்கம்

புது தில்லி : புது தில்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது.

உத்தரகண்டில் உள்ள சமோலியில் தான் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிலநடுக்கம் சில விநாடிகளே நீடித்ததால் உயிருக்கோ அல்லது உடமைகளுக்கோ எவ்வித பாதிப்புமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, June 20, 2011

சிந்திக்க சில நபிமொழிகள்

1) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11). 

2) மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121). 

3) ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள்.அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481).

Sunday, June 19, 2011


ஜெர்மனி: வெள்ளரிக்காய் மூலம் பரவிவரும் வரும் இ-கோலி பாக்டீரியாவானது எப்போது முடிவுக்கு வருமென தெரியாதெனவும் இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும் ஜெர்மனியின் ரொபர்ட் கொச் நிலைய தலைவர் ரினார்ட் பேர்கர் தெரிவிக்கின்றார். இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளன. மேலும் ஸ்பெயின் நாட்டு வெள்ளரிக்காய் உற்பத்தியாளர் மீது குற்றம்; சுமத்தியமைக்காக தனது வருத்ததையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலர் இப்பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்துள்னர். இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. இதேவேளை ஜெர்மனியின் ஹம்பேர்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கர்கள் இருவருக்கும் இ-கோலி தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவீடனிலும் இத்தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா ? கண்டுபிடிக்க உதவும் மத்திய அரசின் இணையதளம்

புது தில்லி : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அடிக்கடி பலர் கடனுக்கும் வட்டிக்கும் பணம் வாங்கி இலட்சக்கணக்கில் ஏமாறுவதை செய்திதாள்களில் அடிக்கடி காண்கிறோம். இனி அப்படி ஏமாறாமல் இருக்க இதோ ஒரு இணையதளம். வெளிநாட்டில் வேலை தரும் அந்நிறுவனம் உண்மையா என்பதை இவ்விணையத்தில் சென்று பார்க்கலாம்.

மத்திய அரசின் இணையமான அத்தளம் http://www.poeonline.gov.in/ ஆகும். இத்தளத்தில் அந்நிறுவனம் உண்மையா என்பதை 3 விதங்களில் கண்டறியலாம். ஏனென்றால் பிரபல நாளிதழ்களை திறந்து பார்த்தால் ஏகப்பட்ட போலி ஏஜெண்டுகள் பெயரில் விளம்பரங்கள் வருவதை பார்க்கலாம்.

எனவே இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருக்கு RA Information ஐ கிளிக் செய்தால் அதில் வரும் துணை மெனுவில் நிறுவனம் அல்லது ஏஜெண்டின் பெயரை கொண்டோ அல்லது அதன் பதிவு எண்ணான RC நம்பரை கொண்டோ அல்லது அதன் தொலைபேசியை கொண்டோ கிளிக் செய்தால் அந்நிறுவனத்தை பற்றிய விபரத்தை தருகிறது. அது நம்பகமானது, ரத்து செய்யப்பட்டதா, மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டதா அல்லது அனுமதி காலாவதியானதா என்று விபரம் தருகிறது.

புதிய கல்வி கட்டண விவரம் - அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டண விவரம், பள்ளிக்கல்வி இணையதளத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. ரவிராஜ பாண்டியன் குழு, திருத்தப்பட்ட புதிய கல்விக் கட்டணத்தைக் கடந்த 13-ம் வெளியிட்டது.

இந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கட்டண பட்டியல் மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டண விபரங்களைக் கீழ்கண்ட பள்ளிக்கல்வி இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இணைப்பு: http://www.pallikalvi.in/schools/schoolfeesstructure.htm

குர்ஆனில் துஆக்கள்

“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:191-194

ஹஜ்ஜின் சிறப்புகள்

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்)பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாகஇருக்கின்றான். அல்குர்ஆன் 3:96-97

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய துஆக்கள்

துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம்

துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம் 17.06.2011 வெள்ளிக்கிழ‌மை மாலை 2 ம‌ணி முத‌ல் 4 ம‌ணி வ‌ரை ந‌டைபெற‌ இருக்கிற‌து.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த‌ ச‌ட்ட‌ உத‌வி முகாமில் ப‌ங்கேற்று ஆலோச‌னை வ‌ழ‌ங்க‌ உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருப‌வ‌ர் வழக்கறிஞர் வி. நந்தகுமார். அமீர‌க‌ வாழ் த‌மிழ் ம‌க்க‌ள் இவ்வாய்ப்பினைப் ப‌ய‌ன்ப‌டுத்தி இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி பெற்றுக் கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு எண் : 050 1321722
மின்னஞ்சல் : nandana_rheema@yahoo.com

Wasalam By - Muthu ismail 971 5 225227

Saturday, June 18, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கீழக்கரையைச் சேர்ந்த சம்சுதீன் என்கின்ற சகோதரருக்கு திங்கள் கிழமை காலை 20-06-2011 மதுரையில் உள்ள வட மழையான் மருத்துவமனையில் இருதய அறுவை சிகச்சை செய்ய வேண்டி இருப்பதால் சகோதரர் அவர்களுக்கு ‘A’ POSSITIVE இரத்தம் 4 யூனிட் அவசரமாகத் தேவைப்படுகின்றது. சம்மந்தப்பட இரத்த வகையைச் சேர்ந்த சகோதரர்கள் அவசர சூழ்நிலைக்கருதி உடனடியாக தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு – சகோ. ஜாஹீர் ஹூசைன்

0091 – 9095635073
அமீரகத்தில் – 050 – 3269161
055 - 7542001

அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய துஆக்கள்

திருமண நிகழ்ச்சிகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லா
இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 20-06-2011


A.முஹம்மது சபீா் = A.சப்ரித்து பிர்தோஸ்

இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு
www.முஹம்மதுபந்தர்.tk,ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும் பொது மக்களும்

ஷெய்க் உஸாமா பின் லாதின் ஒரு ஆவணம்

OurUmmah: முஸ்லிம் உம்மாவின் சிங்கம் என்று வர்ணிக்கப்படும் ஷெய்க் அஷ் சஹீத் உஸாமா பின் லாதின் தொடர்பாக்க பலரும் பல கதைகளைசொல்லிவருகின்றனர் அந்த கதைகளில் பல கதைகள் மேற்கு உளவு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கதைகளும் மிடியாக்களில் உலா வரும் வேலை இன்னும் பலரும் ஊகங்களின் அடிப்படையிலும் கதைகளை சொல்லிவருகின்றனர் இந்த வேளையில் அல் ஜெஸீரா தொலைக்காட்சி அவர் பற்றிய சிறிய ஆவணம் ஒன்றை தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளது அந்த ஆங்கில ஆவணம் இங்கு பதிவு செய்யப்படுகின்றது.

அந்த ஆவணத்தில் தன்சானியா , கென்யா அமெரிக்கா தூதரகங்களை தாம் தகவில்லை என்ற ஷெய்க் உஸாமாவின் மறுப்பு பதிவாகியுள்ளதுடன் அவர் எந்த மதத்துக்கோ இனத்துக்கோ, ஆங்கிலேயர்களுக்கோ எதிரானவர் அல்லர் ஆனால் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்ளைக்கு எதிரானவர் என்று அவர் தெரிவித்ததும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பானது அதேவேளை அஷ் சஹீத் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் அஸ்ஸாம் ஆப்கானிஸ்தானில் அவரின் ஜும்மாஹ் குத்பாவின் பின்னர் அவரின் குழந்தைகளுடன் கொல்லப்பட்டமை தொடர்பில் CIA, மொசாட் ஆகியவற்றுடன் மிக பிரதான சூத்திரதாரியாக ரஷிய KGB யும் சந்தேகிக்கப்பட்டமை சுட்டிகாட்டப் படவேண்டிய விடயமாகும், அல் ஜெஸீரா தொலைக்காட்சியின் இந்த ஆவணம் ஓரளவு நடுநிலை பார்வையை வழங்குகின்றது.

திருமண நிகழ்ச்சிகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லா
இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 19-06-2011


M.முஹம்மது இஸ்மாயில் = M.ஹாஜிராம் பீவி

இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு
www.முஹம்மது பந்தர்.tk,ஜமாத்தார்கள்மற்றும்உறவினர்களும்பொது மக்களும்

மரண செய்திகள்

17/6/2011 நாகூர் ஆண்டவர் அவர்களின் பேரனும்,அப்துல்லா அவர்களின் மகனுமாகிய அப்துல் ரஹ்மான் நேற்று மாலை 6:00 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜணாஜா நமதூரில் இன்று 2:00 மணியளவில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்

கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. 

Friday, June 17, 2011

திருமண நிகழ்ச்சிகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)


இன்ஷா அல்லா
இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 19-06-2011


U.முஹம்மது இத்ரீஸ் = A.ரொஹைனி
இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு
www.முஹம்மது பந்தர்.tk,ஜமாத்தார்கள் மற்றும்உறவினர்களும்பொது மக்களும்

Thursday, June 16, 2011

சந்திரகிரகண சிறப்பு தொழுகை

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் -முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம்- ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹதிமா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுக்களும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரகணம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர் 'இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ வாழ்விற்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும்போது விரைந்து தொழுங்கள்' என்று கூறினார்கள்.நான் உர்வாவிடம் உங்கள் சகோதரர் மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது ஸுப்ஹுத் தொழுகை போல் இரண்டு ரக்அத் தொழுததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லயே என்று கேட்டேன. அதற்கு அவர், ஆம்! அவர் நபி வழிக்கு மாற்றம் செய்துவிட்டார்' என்று விடையளித்தார் என கஸீர் இப்னு அப்பாஸ் குறிப்பிட்டார். 
ஸஹீஹ் புகாரி-1046.

நாமக்கல் மோகனூர் அருகே விபத்து : முஹம்மது பந்தர் ஓட்டுனர் சேட் உள்பட 11 பேர் பலி

Wednesday, June 15, 2011

மரண செய்திகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
15/06/2011 நமதூர்(முஹம்மது பந்தர்) ஹத்திஜா நகர் சேர்ந்த கஞ்சா அலி உள்ள பேரனும்,அப்துல் ரஹூம் அவர்களின் மகன்
சேட் (என்கிற) முஹம்மது இப்ராஹூம் அவர்கள் நேற்று மாலை 6.00.pm மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜணாஜா நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

நடந்த சம்பவம்



Monday, June 13, 2011

திருமண நிகழ்ச்சிகள்

அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)


இன்ஷா அல்லா

இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 16-06-2011

A.ரபீக் (எ) பீர்முகமது = J.நஸ்ரின் பானு
இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு
www.முஹம்மது பந்தர்.tk , ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும்பொது மக்களும்



திருமண நிகழ்ச்சிகள்


அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)


இன்ஷா அல்லா



இடம் :- முஹம்மது பந்தர்
திருமண நாள் :- 15-06-2011

H.முகமது ஹசன்,T.பெனாசீர் பேகம்

இரு மனமும் (திருமணம் என்ற பந்தத்தால்) பரிபூரண நட்புடன் ஒண்றினைந்து எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்தவணாக வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு
www.முஹம்மது பந்தர்.tk , ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும் பொது மக்களும்

இஸ்லாம்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழையமாட்டார்கள்:
1) பெற்றோரை நிந்திப்பவன்
2) மதுவில் மூழ்கியிருப்பவன்
3) செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன்.
ஆதாரம் : நஸயி, ஹாக்கிம், பஸ்ஸார்

‘உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி}

Sunday, June 12, 2011

இறைநம்பிக்கை

ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி-9

'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி-14

Friday, June 10, 2011

டீசல் விலையை உயர்த்த மந்திரி ஜெய்பால் முயற்சி

11 Jun 2011 12:02,
புதுடில்லி:பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள்தோறும் ஏற்பட்டு வரும் 450 கோடி ரூபாய் இழப்பை சரிக்கட்ட, டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி வலியுறுத்தினார்.மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, நேற்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது, அதிகாரமிக்க அமைச்சர் குழுக் கூட்டத்தை எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து விவாதித்தார்.இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசிய ஜெய்பால் ரெட்டி கூறியதாவது: டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை அடக்க விலைக்கு கீழாக விற்பதன் மூலம், பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு இழப்பு ஏற்படும் பணத்தை எப்படி ஈடுகட்டுவது, இதை சரிக்கட்ட, பொதுத் துறை நிறுவனங்களுக்கு என்ன சலுகை வழங்குவது என்பது குறித்து, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு தான் முடிவு செய்யும். இதை எப்போது கூட்டுவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக விவாதிக்கப்பட்டது.இவ்வாறு ஜெய்பால் ரெட்டி கூறினார்.மத்திய பெட்ரோலிய அமைச்சகம் டீசல் விலையை லிட்டருக்கு 3 முதல் 4 ரூபாய் வரையும், சிலிண்டர் விலையை 20 முதல் 25 ரூபாய் வரையும் உயர்த்த வேண்டும் என கோரி வருகிறது. மண்ணெண்ணெய் விலையையும் கணிசமாக உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கையாகும்.

அபுதாபி- ரெஸ்டாரென்ட் மானேஜர் தேவை

அபுதாபியில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டுக்கு மேலாளர் தேவைப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி rahim699@gmail.com

ஹோட்டல் மேனேஜ்மெண்டில் பட்டம் பெற்று இரண்டு அல்லது மூன்று வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.

சவுதி அரேபியா - லிப்ட் டெக்னீசியன் தேவை

சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் பிரபல நிறுவனத்திற்கு எலிவேட்டர் டெக்னீசியன் தேவை.

மேலதிக தொடர்புக்கு: 0096654 1838218.

மாற்றத்தகுந்த இகாமா வைத்திருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 6, 2011

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006 தொலைபேசி: 2829 5445 

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை – 14 தொலைபேசி: 94440 52530 

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை – 06 

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை – 06 

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) 

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34 

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34

Sunday, June 5, 2011

மது அருந்துவதால் ஏற்படும் தண்டனை

மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான்.மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

புனித ஹஜ் பயணம்

நடப்பு ஆண்டில் தமிழகத்திலிருந்து, புனித ஹஜ் பயணம் செல்வதற்கு 3,049 பேர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை இராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை, 2011-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்லும் பயணிகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த சுமார் 1,500 ஹஜ் பயணிகள் கலந்து கொண்டனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைச் செயலாளர் சந்தானம், தமிழக ஹஜ் குழு செயல் அலுவலர் அலாவுதீன், குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அஸ்ஸாலமு அலைக்கும்(வரஹ்)

AL DAWA MEDICAL SERVICES CO.RIYADH என்ற நிறுவனத்திற்கு 8 டிரைவர்கள் தேவை. தொடர்பு கொள்ள வேண்டிய நபர்
MR. GHULAM MOHAMMED KHAN
Sales Manager

Landline # 01-4389009
Mobile # 0508527433

Saturday, June 4, 2011

மரண செய்திகள்

அஸ்ஸாலமு அலைக்கும்(வரஹ்)

04/06/2011 நமதூர்(முஹம்மது பந்தர்) குலிஸ்தான் தெருவை சேர்ந்த ”மர்ஹிம்”டீக்கடை அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும்,A.அன்வர் பாட்ஷா ஜிமேரா ஜாகிர் உசேன் அவர்களின் தயாறுமான ஹாஜியா ஏசான் பீவி அம்மாஅவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜணாஜா நாளை காலை 10 மணியளவில் நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

Thursday, June 2, 2011

சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மருந்தளிக்கும் பள்ளிவாசல்!

சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில், பள்ளிவாசல் ஒன்றில், சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்து வருகின்றனர். ஆண்டுக் கணக்கில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும், அவர்கள் அளிக்கும் மூலிகை மருந்து மூலம், நோயிலிருந்து எளிதில் விடுபடுவதாகக் கூறப்படுகிறது.

சத்திஸ்கருக்குச் சிகிச்சைக்கு செல்பவர்களில், 50 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதாகவும் தெரிகிறது.

இதுபற்றி நாமக்கல் வழிகாட்டி நலச்சங்கத் தலைவர் சிவகுமார் நிருபர்களிடம் கூறுகையில்:

"சர்க்கரை நோய்க்கு, சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மருந்து கொடுக்கின்றனர். அந்த மருந்தை, ஒட்டகப் பாலுடன் கலந்து தருகின்றனர்.
நாள்தோறும், காலை 6.30 மணி முதல், 11 மணி வரை சிகிச்சை அளிக்கின்றனர். சர்க்கரை நோய் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள், ஒரு முறை மருந்து சாப்பிடுவதன் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மருந்தை, அங்கேயே தங்கி சாப்பிட்டு திரும்ப வேண்டும். இதற்காக, குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதியிலிருந்தும் அங்கு வருகின்றனர். ஆண்டு முழுவதும், சர்க்கரை நோய்க்கு மருந்து வழங்குகின்றனர். நூற்றுக்கு, 70 சதவீதம் பேர், அங்கு மருந்து சாப்பிட்டதன் மூலம், நோய் கட்டுப்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கின்றனர்."
Related Posts Plugin for WordPress, Blogger...